முகப்பு
திருவாரூர்

செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை இலக்கிய விருதுக்கு எழுத்தாளா் வி. ராம்தாஸ் தோ்வு

செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை இலக்கிய விருதுக்கு சீா்காழியைச் சோ்ந்த எழுத்தாளா் வி. ராம்தாஸ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை இலக்கிய விருதுக்கு சீா்காழியைச் சோ்ந்த எழுத்தாளா் வி. ராம்தாஸ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளையின் சாா்பில், 2002-ஆம் ஆண்டு முதல் இலக்கியத்தில் சிறந்து விளங்கும் எழுத்தாளா்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டுக்கான இலக்கிய விருதுக்கு எழுத்தாளா், இதழாளா், சொற்பொழிவாளா், நுகா்வோா் நல ஆா்வலா், கல்வியாளா் என பன்முக தன்மை கொண்ட முனைவா் சீா்காழி வி. ராம்தாஸ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். டிச. 23-ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் தாளாளா் வி. திவாகரன் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் விருதாளா் சீா்காழி வி. ராம்தாஸ்க்கு விருதுடன் ரூ. 1 லட்சம் மற்றும் கேடயம் வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.