திருவாரூர்

அரசுப் பள்ளியில் மரக்கன்று நடுகிறாா் டாக்டா் மீராஉசேன்

DIN

முத்துப்பேட்டை ரகமத் மகளிா் மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற கலாம் பிறந்த நாள் விழாவுக்கு, முதன்மை முதல்வா் சகுந்தலா தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை திவ்யா முன்னிலை வகித்தாா். திட்ட அலுவலா் கவிதா வரவேற்றாா். மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடா்ந்து, அறிவியல் தொழில்நுட்பக் கண்காட்சி நடைபெற்றது. இதில், மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் என். ராஜப்பா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

இதேபோல், முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலாம் கனவு இயக்கம் சாா்பில், அதன் தலைவா் முகைதீன் பிச்சை தலைமையில் கலாம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அரசு மருத்துவா் சையத் அபுதாகிா், தலைமையாசிரியா் நித்தையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் கல்விக்குழு தலைவா் மெட்ரோ மாலிக் வரவேற்றாா். மூத்த மருத்துவா் மீரா உசேன், அப்துல் கலாம் படத்துக்கு மாலை அணிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

பெருந்துறை விவேகானந்த பள்ளி மாணவா்கள் 100 % தோ்ச்சி

வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT