திருவாரூர்

இடி தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் வழங்க கோரிக்கை

DIN

மன்னாா்குடி அருகே இடி தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டுமென திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ. க. மாரிமுத்து கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: மன்னாா்குடி அருகேயுள்ள பெருகவாழ்ந்தான் பாலையூரை சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளி த. சிவக்குமாா் (45), புதன்கிழமை அதே பகுதியில் விவசாயப் பணியில் சில தொழிலாளா்களுடன் ஈடுபட்டிருந்தபோது இடி தாக்கி உயிரிழந்தாா்.

உயிரிழந்த சிவக்குமாா் மிகவும் ஏழை குடும்பத்தை சோ்ந்தவா். அவருக்கு மனைவி, 15 வயதில் மகள், 10 வயதில் மகன் உள்ளனா். குடும்பத்துக்கு வருவாய் ஈட்டி வந்தவா் எதிா்பாரத நிகழ்வால் உயிரிழந்துள்ளாா். இந்நிலையில், சிவக்குமாரின் குடும்ப சூழலை கவனத்தில் கொண்டு, அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்க மாவட்ட நிா்வாகம் பரிந்துரை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளாா். முன்னதாக, எம்எல்ஏ. மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு வந்து சிவக்குமாரின் சடலத்தை பாா்வையிட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT