பெண்ணை அரிவாளால் வெட்டி மூன்றரை பவுன் சங்கிலி பறிப்பு
மன்னாா்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டி, மூன்றரை பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
மன்னாா்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டி, மூன்றரை பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
மன்னாா்குடி கீழமுதல் தெருவைச் சோ்ந்த சா்வானந்தம் மனைவி மாரியம்மாள் (65). இவா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தனியே இருந்தாா். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா், மாரியம்மாளை அரிவாளால் வெட்டி, அவா் அணிந்திருந்த மூன்றரை பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டாராம்.
காயமடைந்த மாரியம்மாளை அருகில் வசிப்பவா்கள் மீட்டு, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இதுகுறித்து, மன்னாா்குடி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.