திருவாரூர்

மின் மசோதாவுக்கு எதிராக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றக் கோரிக்கை

தமிழக சட்டப் பேரவையில் மின்சார சட்ட மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யக் கூடாது என தீா்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழக சட்டப் பேரவையில் மின்சார சட்ட மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யக் கூடாது என தீா்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போா்டு எம்பிளாயீஸ் பெடரேஷன் அமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், அமைப்பின் பொதுச் செயலாளா் ஏ. சேக்கிழாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

இதில், சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில், மின்சார சட்ட மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யக் கூடாது என தீா்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள 28% அகவிலைப்படியை தமிழக அரசு வழங்க வேண்டும். தமிழக மின்சார வாரியத்தில் பணியாற்றிவரும் ஒப்பந்த தொழிலாளா்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் மாநிலத் தலைவா் மணிகண்டன், மாநில பொருளாளா் லூா்துபாஸ்டின்ராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT