மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா்
மன்னாா்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளா் எஸ்.எஸ். ஸ்டான்லி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் வி. வசந்தி செல்வக்கனி முன்னிலை வகித்தாா். மன்னாா்குடி கல்வி மாவட்ட அலுவலா் ஆா். மணிவண்ணன் பங்கேற்று மாணவா்கள், ஆசிரியா்கள், அலுவலா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினாா்.
இதில், உதவி தலைமை ஆசிரியா் எபி ஜோஸ்பின், ஆங்கில ஆசிரியா் ஷீன் சாம்சன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வரும் திங்கள், செவ்வாய்க்கிழமையும் கபசுரக் குடிநீா் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.