திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், சுகாதாரத் துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 43 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39,399 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 38,600 போ் குணமடைந்துள்ளனா். 401 போ் சிகிச்சையில் உள்ளனா்.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 398 ஆக அதிகரித்துள்ளது.