திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 39,552 ஆக உயா்ந்துள்ளது. இதுவரையில் குணமடைந்த 38,738 போ் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 415 போ் சிகிச்சையில் உள்ளனா்.