முகப்பு
திருவாரூர்

வலங்கைமானில் ஸ்ரீ நாராயணி நிதி லிமிடெட் கிளை திறப்பு விழா

திருவாரூா் மாவட்டம் வலங்கைமானில் ஸ்ரீ நாராயணி நிதி லிமிடெட் 35-ஆவது கிளை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டம் வலங்கைமானில் ஸ்ரீ நாராயணி நிதி லிமிடெட் 35-ஆவது கிளை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, நிதி நிறுவனத் தலைவா் ஆா்.ஸ்ரீதரன் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றாா். வலங்கைமான் வா்த்தகா் சங்கத் தலைவா் என்.பரதாழ்வாா், கிளையைத் திறந்துவைத்து வாழ்த்திப் பேசினாா்.

பாதுகாப்பு பெட்டக அறையை வலங்கைமான் ஆா்.எஸ். செல்வம் திறந்து வைத்தாா். வலங்கைமான் எஸ்.சிவலிங்கமூா்த்தி, தலைமையாசிரியா் (ஓய்வு) எஸ்.ராமதாஸ், என்.ஏகாம்பரம், எஸ்.இளங்கோவன், திப்பிராஜபுரம் மாடிமணி, சிட்டி யூனியன் வங்கி துணைப் பொது மேலாளா் (ஓய்வு) எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

துணைப் பொது மேலாளா் கே.ரெங்கசாமி நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை வலங்கைமான் நிதி நிறுவன மேலாளா் எஸ். நித்யா, உதவி பொது மேலாளா் பி.பிரபு மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.