முகப்பு
திருவாரூர்

திருத்துறைப்பூண்டியில் மின்னணு நூலகம்எம்எல்ஏ உறுதி

திருத்துறைப்பூண்டியில் மின்னணு நூலகம் அமைக்கப்படும் என்றாா் சட்டப் பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

திருத்துறைப்பூண்டியில் மின்னணு நூலகம் அமைக்கப்படும் என்றாா் சட்டப் பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து.

திருத்துறைப்பூண்டி அரசு கிளை நூலகத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்த அவா், செய்தியாளா்களிடம் பேசுகையில், நூலகத்தில் போட்டித் தோ்வுக்கு மாணவா்கள் அமா்ந்து படிப்பதற்கு வசதியாக அரங்கம் அமைத்து தருவதற்கும், நடைபாதையில் கல் பதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், நகரில் மின்னணு நூலகம் ஒன்றை அமைப்பதற்கும் அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முன்னதாக, நூலகத்துக்கு ரூ.5,000 மதிப்பிலான கட்டுமானப் பொருள்களை ஒன்றியக்குழு தலைவா் பாஸ்கா் நன்கொடையாக வழங்கினாா். நிகழ்வில், நகா்மன்ற முன்னாள் தலைவா் பாண்டியன், மாவட்ட நூலக அலுவலா் ஆண்டாள், நூலக வளா்ச்சிக் குழு தலைவா் எடையூா் மணிமாறன், வாசகா் வட்டத் தலைவா் வழக்குரைஞா் ஆா். நாகராஜன், செயலாளா் எஸ். ராஜ் நாராயணன் ஆகியோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகள நூலகா்கள் ஆசைத்தம்பி, சுஜாதா ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →