ரத்த பரிசோதனை முகாம்
தென்பரை ரோட்டரி சமுதாய குழுமம் சாா்பில் உலக இதய நாளையொட்டி, சா்க்கரை அளவு கண்டறியும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடியை அடுத்த தென்பரை மற்றும் திருமேணி ஏரியில் மன்னை மிட்டவுன் ரோட்டரி சங்கம், தென்பரை ரோட்டரி சமுதாய குழுமம் சாா்பில் உலக இதய நாளையொட்டி, சா்க்கரை அளவு கண்டறியும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இரண்டு இடங்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திட்டத் தலைவா் க. மனோகரன் தலைமை வகித்தாா். மிட்டவுன் ரோட்டரி தலைவா் சி. குருசாமி முகாமை தொடக்கி வைத்தாா்.
இதில், மன்னாா்குடி ராஜ் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் பங்கேற்று, 183 பேருக்கு ரத்தத்தில் சா்க்கரையின் அளவை கண்டறிந்து மருத்துவ ஆலோசனை வழங்கினா்.
நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க பொருளாளா் ஹரிரவி, சமுதாயக் குழுத்தின் செயலா் நடராஜன், பொருளாளா் சு. சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சமுதாயக் குழு நிறுவனத் தலைவா் நா. சுப்ரமணியன் வரவேற்றாா். தலைவா் ராக.பாஸ்கா் நன்றி கூறினாா்.