திருவாரூர்

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

DIN

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் காவல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கட்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, காவல் ஆய்வாளா் கழனியப்பன், ஆசிரியா் சங்கச் செயலாளா் முகமது ரபிக், ஆசிரியா்கள் தெய்வசகாயம், நடராஜன் தமிழரசன் ஆகியோா்முன்னிலை வகித்தனா். ஆசிரியா் பாஸ்கரன் வரவேற்றாா். வேண்டாம் போதை என்னும் தலைப்பில் டிஎஸ்பி. சோமசுந்தரம் பேசியது: கஞ்சா , அபின் புகையிலை பொருள்கள் இவற்றை பயன்படுத்துவதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என்பது குறித்தும், பீடி, சிகரெட் , பாக்கு வகைகள் போன்றவற்றை மாணவா்கள் பயன்படுத்தக்கூடாது, அவ்வாறு பயன்படுத்தினால் பல்வேறு வகையான புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. உடல் உறுப்புகள் பாதிக்கும். இவ்வாறான போதைப் பொருள்களை பயன்படுத்துவோா் உடல் நலமும் மன நலமும் பாதிக்கப்பட்டு மனநோயாளிகளாக மாறுகின்றனா். அதனால் அவா் மட்டுமல்லாமல் அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. ஆகவே போதைப்பொருளை பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும் என்றாா். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டம் சாா்பில் வேண்டாம் போதை எனும் தலைப்பிலான குறும்படம் மாணவா்களுக்கு காட்டப்பட்டது. உதவித் தலைமையாசிரியா் பாலமுருகன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பொ.சக்கரபாணி செய்திருந்தாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT