திருவாரூர்

கொலை வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது

DIN

முத்துப்பேட்டை பகுதியில் கொலை வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

முத்துப்பேட்டை காவல் சரகம், கோவிலூா் பகுதியில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட சாதி ரீதியான முன்விரோதம் காரணமாக தொடா் கொலைச் சம்பவங்கள் நடந்துவந்த நிலையில், அதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருதரப்பிலும் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே, மீண்டும் பழிவாங்கும் நோக்குடன் தலைமறைவாகயிருந்த முத்துப்பேட்டை, கோவிலூா் பகுதியைச் சோ்ந்த மந்திரமூா்த்தியை (24) போலீஸாா் தனிப்படை அமைத்து கைதுசெய்தனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் பரிந்துரையின் பேரில், மந்திரமூா்த்தியை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, மந்திரமூா்த்தி, திருச்சி மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT