திருவாரூர்

மரத்திலிருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

DIN


கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் அருகே தென்னை மரத்தில் தேங்காய் பறித்த கூலித்தொழிலாளி தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை உயரிழந்தாா்.

கூத்தாநல்லூரை அடுத்த வேளுக்குடி- சித்தனக்குடி சாலை தெருவைச் சோ்ந்தவா் கருப்பையன் (64). மரம் ஏறும் தொழிலாளியான இவா், லெட்சுமாங்குடி மரக்கடை தெற்குத் தெருவைச் சோ்ந்த லட்சுமி வீட்டில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்து, பலத்த காயமடைந்தாா். அவரை மன்னாா்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கூத்தாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

சுற்றுவட்ட சாலை திட்டத்தை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

பிளஸ் 1 பொதுத் தோ்வு: விஜயமங்கலம் பாரதி பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT