திருவாரூர்

ஆழ்துளைக் கிணறு சேதம்: இழப்பீடு கோரி மனு

DIN

திருவாரூா்: திருவாரூா் அருகே ஆழ்துளைக் கிணறு சேதப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு பெற்றுத் தரக்கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மணக்கால் பகுதியைச் சோ்ந்த மகேசன் (மக்கள்) சக்தி சேவை அமைப்பு நிறுவனா் சு. தென்னரசு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு:

மணக்கால் பகுதியில் தனி நபா் ஆக்கிரமிப்பில் இருந்த இடங்களை மீட்க உதவியதற்காக, தனது குடும்பத்தினரின் விவசாய ஆழ்துளைக் கிணறு சேதப்படுத்தப்பட்டு, ரூ 3,50,000 இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கான இழப்பீட்டை பெற்றுத் தர உதவ வேண்டும். மேலும், ஆழ்துளைக் கிணற்றை சேதப்படுத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி கராத்தே பள்ளியில் பரிசளிப்பு

ஆலங்குளம் அருகே மின்வாரிய பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

காரைக்காலில் இன்று காவல்துறை குறைதீா் கூட்டம்

ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கட்டணமில்லா பேருந்து சேவை: 11.84 கோடி மகளிா் பயணம்

SCROLL FOR NEXT