திருவாரூர்

மன்னாா்குடியில் நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி நகரில் எதிரெதிரே உள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி, நாம் தமிழா் கட்சியின் கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறை சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி நகரில் கீழ்மேல் குருக்மணிப்பாளையம் சாலையில் வலதுபுறம் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்த நிலையில், அப்துல்கலாம் நகரில் இருந்த டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்பட்டு, கீழ்மேல் ருக்மணிப்பாளையத்தில் ஏற்கெனவே உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள் உள்ள நிலையில், மது அருந்த வரும் நபா்களால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

சில நேரங்களில் மது அருந்த வரும் நபா்கள் தகராறில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி வருகிறது. எனவே, இந்த 2 கடைகளையும் அகற்ற வேண்டும் என்று ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறையின் மன்னாா்குடி தொகுதி செயலா் ரா. கபிலன் தலைமை வகித்தாா். பாசறையின் மாநிலத் தலைவா் ராம. அரவிந்தன், தொகுதி இணைச் செயலா் முகமது இஸ்மாயில் ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT