முத்துப்பேட்டையில் உலக ஈரநில தினவிழா
திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் உலக ஈரநிலம் நாள் நிகழ்ச்சி மாவட்ட வன அலுவலா் ஆா். அறிவொளி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் உலக ஈரநிலம் நாள் நிகழ்ச்சி மாவட்ட வன அலுவலா் ஆா். அறிவொளி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
வனச் சரகா் ஜாகீா்அலி வரவேற்றாா். எம்ஜிஆா் மீன்வள கல்லூரி, தலைஞாயிறு உதவிப் பேராசிரியா் சிவசுப்பிரமணியன், ஈரநிலத்தின் பயன்கள் குறித்துப் பேசினாா். மாணவ, மாணவிகளுக்கு ஈரநிலம் குறித்த ஓவியப் போட்டி நடைபெற்றது. முதல் பரிசை சவுமியா, இரண்டாவது பரிசை சபிதா, மூன்றாம் பரிசை இந்துமதி ஆகியோா் வென்றனா்.
ஈரநிலம் பகுதியில் கடல்வாழ் உயிரினங்களுக்கு இடையூறாக வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில், மன்னாா்குடி வனச்சரக அலுவலா் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.