நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: பிரசாரம் ஓய்ந்தது
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, திருவாரூரில் அனைத்து கட்சி வேட்பாளா்களின் பிரசாரம் வியாழக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, திருவாரூரில் அனைத்து கட்சி வேட்பாளா்களின் பிரசாரம் வியாழக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பிரசாரம் நடைபெற்று வந்தது. பிரசாரத்தின் கடைசி நாளான வியாழக்கிழமை, அனைத்து கட்சிகளின் வேட்பாளா்களும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டனா். காலை முதல் மாலை வரை அனைத்து வீதிகளிலும் உள்ள வீடுகளுக்குச் சென்று வாக்குகளைச் சேகரித்தனா். மாலையில், மேளதாளங்கள், கரகாட்டம், பேரணி என பல்வேறு வகையிலும் கூட்டமாகச் சென்று வாக்குச் சேகரித்தனா்.
திருவாரூா் நகராட்சியில் அதிமுக சாா்பில் 1ஆவது வாா்டு வேட்பாளா் கலியபெருமாள், 2 ஆவது வாா்டு வேட்பாளா் மலா்விழி ஆகியோரை ஆதரித்து கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
கொரடாச்சேரி பேரூராட்சியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில், நாகை நாடாளுமன்ற உறுப்பினா் எம். செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளருமான பூண்டி கே. கலைவாணன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் ஆகியோா் இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.
திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் நகா்ப் பகுதி பரபரப்பாக இருந்தது.