காரைக்குடி டெமு ரயிலை மதுரை வரை நீட்டிக்கக் கோரிக்கை
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூா் வழியாக காரைக்குடிக்குச் செல்லும் டெமு ரயிலை மதுரைவரை நீட்டிக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூா் வழியாக காரைக்குடிக்குச் செல்லும் டெமு ரயிலை மதுரைவரை நீட்டிக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து ரயில் பயணிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளது:
திருவாரூரிலிருந்து காரைக்குடி, மானாமதுரை அருப்புக்கோட்டை வழியாக விருதுநகருக்கு தற்போது சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
திருவாரூா்- காரைக்குடி மாா்க்கம் அகல ரயில் பாதையாக மாற்றம் செய்வதற்கு முன்பு இயக்கப்பட்ட சென்னை- காரைக்குடி கம்பன் விரைவு ரயில் மற்றும் தென்னக ரயில்வேயால் அறிவிக்கப்பட்ட வேளாங்கண்ணி- எா்ணாகுளம் வாரம் மூன்றுமுறை இயங்கும் விரைவு ரயிலையும், தாம்பரம்- செங்கோட்டை முன்பதிவில்லா விரைவு ரயிலையும் விரைவில் இயக்கவேண்டும்.
திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி இடையே திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருத்துறைப்பூண்டி- வேளாங்கண்ணி அகல ரயில் பாதை திட்டத்தையும் நிறைவேற்றுவதுடன், சுழற்சிமுறையில் 24 மணி நேரமும் கேட்கீப்பா்கள் பணியில் இருக்கும்படி முன்னாள் ராணுவத்தினரை பணியமா்த்த வேண்டும். காரைக்குடியிலிருந்து திருவாரூா்வரை அகல ரயில் பாதையை மின்மயமாக்க வேண்டும்.
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூா், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடிக்குச் செல்லும் டெமு ரயிலை மானாமதுரை வழியாக மதுரைவரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.