முகப்பு
திருவாரூர்

சமத்துவப் பொங்கல் விழா

திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா்அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா்அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா்அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், 300 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதைத்தொடா்ந்து, அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாவட்ட அமைப்பாளா் கருணாநிதி, நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.