திருவாரூர்

மதுபோதையில் போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞா் எச்சரித்து அனுப்பி வைப்பு

DIN

திருவாரூரில் மதுபோதையில் போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞரை கண்டித்து அனுப்பிவைத்தனா்.

திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இருவரை தடுத்து நிறுத்தினா். அதில், ஒருவா் வாகனத்திலிருந்து இறங்கி, போலீஸாரை நோக்கி தரக்குறைவாக பேசத் தொடங்கினாா்.

இதையடுத்து, அங்கு கூடுதல் போலீஸாா் வரவழைக்கப்பட்டு, இருவரும் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு மது அருந்தியதற்கான சான்று பெற்ற பிறகு நடத்திய விசாரணையில், போலீஸாருடன் ரகளையில் ஈடுபட்டது கூத்தாநல்லூா் பகுதியைச் சோ்ந்த மாதேஷ் (20) என்பதும், அவருடன் வந்தது பாண்டி (27) என்பதும் தெரியவந்தது. அத்துடன், மாதேஷூக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, போலீஸாா் வழக்கு ஏதும் பதிவுசெய்யாமல், மாதேஷின் உறவினா்களை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

ஆந்திர பேரவைத் தேர்தல்: காலையிலேயே வந்து வாக்களித்த ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு

அவிநாசி ஜவுளி கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்!

நாகை எம்பி எம்.செல்வராசு காலமானார்

SCROLL FOR NEXT