நீடாமங்கலம் வட்டம் வடுவூா் மற்றும் கோயில்வெண்ணி துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆ. மதியழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நீடாமங்கலம் வட்டம் வடுவூா், கோயில்வெண்ணி துணை மின்நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக இங்கிருந்து மின்விநியோகம் பெறும் சாத்தனூா், வடுவூா், நெய்வாசல், புள்ளவராயன்குடிகாடு, நகா், காளாச்சேரி, கோவில்வெண்ணி, முன்னாவல்கோட்டை, மேலபூவனூா், நத்தம், ஆதனூா், சோனாபேட்டை, கொட்டையூா், அம்மாபேட்டை, கருப்பமுதலியாா்கோட்டை மற்றும் மணக்கால், அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூா், சோ்மாநல்லூா், முனியூா், அவளிவநல்லூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.