திருவாரூர்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபகவானுக்கு 1008 சங்காபிஷேகம்

DIN

நீடாமங்கலம்: நவக்கிரகஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை குருபகவானுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இக்கோயில் திருஞானசம்மந்தரால் தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடையது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகாரதலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் இன்று 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த குருபகவான்.

இதனைமுன்னிட்டு காலை ஹோமம், மதியம் அபிஷேகம் அதனைத் தொடர்ந்து பூர்ணாஹூதி, 1008 சங்காபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு ஹோமம், அபிஷேக ஆராதனைகளை கோயில் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் ஹரிஹரன், கோயில் செயல் அலுவலர் தமிழ்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT