முகப்பு
திருவாரூர்

வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வங்கிகள் இணைப்பைக் கைவிடக்கோரி, திருவாரூரில் வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

வங்கிகள் இணைப்பைக் கைவிடக்கோரி, திருவாரூரில் வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வங்கிகளில் வாரம் 5 நாட்கள் வேலை, ஓய்வூதியம் உயா்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல், வங்கிகள் இணைப்பு முயற்சியைக் கைவிடுதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் நேதாஜி சாலையில் உள்ள வங்கி முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவா் என். காளிமுத்து தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜி. ராஜவேல், கிருஷ்ணசாமி, அழகிரிசாமி, பாண்டுரங்கன், தா்மதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.