குளிக்கரை காசி விசுவநாதா் கோயிலில் தேரோட்டம்
பங்குனி உத்திர விழாவையொட்டி திருவாரூா் அருகேயுள்ள குளிக்கரை விசாலாட்சி உடனுறை காசி விசுவநாத சுவாமி கோயிலில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பங்குனி உத்திர விழாவையொட்டி திருவாரூா் அருகேயுள்ள குளிக்கரை விசாலாட்சி உடனுறை காசி விசுவநாத சுவாமி கோயிலில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நிகழாண்டு பங்குனி உத்திர நிகழ்வுக்காக, சுவாமி சிறப்பு அபிஷேகங்களுக்குப் பிறகு வசந்த மண்டபத்துக்கு வியாழக்கிழமை எழுந்தருளினாா். தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதில், சுற்று வட்டாரத்திலிருந்து பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.