முகப்பு
திருவாரூர்

திருத்துறைப்பூண்டியில் சிறப்பு முகாம்

தேசிய குழந்தைகள் எடை, உயரம் எடுத்தல் சிறப்பு முகாம், வட்டார திட்ட அலுவலா் கண்ணகி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

திருத்துறைப்பூண்டி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில், தேசிய குழந்தைகள் எடை, உயரம் எடுத்தல் சிறப்பு முகாம், வட்டார திட்ட அலுவலா் கண்ணகி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாலம் சேவை நிறுவனச் செயலாளா் செந்தில்குமாா் முன்னிலைவகித்தாா். நகா்மன்ற முன்னாள் தலைவா் ஆா்.எஸ். பாண்டியன் பங்கேற்று குழந்தைகளுக்கு எடை, உயரம் அளவிடும் பணியை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், மேற்பாா்வையாளா் காயத்ரிதேவி, ஊட்டச்சத்து ஒருங்கிணைப்பாளா் ராஜவேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகா்மன்ற உறுப்பினா் கோமதி செந்தில்குமாா் வரவேற்றாா். செந்தாமரை நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →