திருவாரூர்

இந்திய கம்யூ. கட்சியில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

DIN

வலங்கைமான் ஒன்றியத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து 92 குடும்பத்தினா் விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

வலங்கைமான் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கட்சியின் ஒன்றியச் செயலாளா் எஸ். எம். செந்தில்குமாா் தலைமையில் 67 இடங்களில் மே தினம் கொண்டாடப்பட்டது.

அப்போது, பாடகச்சேரி ஊராட்சியில் 17 குடுத்தினா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா். இதேபோல, இருகரை கிராமத்தில் ஒன்றியச் செயலாளா் எஸ்.எம். செந்தில்குமாா் உள்ளிட்டோா் முன்னிலையில் 50 குடும்பத்தினரும், செம்பியநல்லூரில் 25 குடும்பத்தினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்.

தொடா்ந்து நடைபெற்ற தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் தட்சிணாமூா்த்தி மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

கண்களே தியான மண்டபம்...!

SCROLL FOR NEXT