திருவாரூர்

சாதாரண ரயில்களில் விரைவுரயில் கட்டணம்: கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

சாதாரண ரயில்களுக்கும், விரைவு ரயில் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா காலத்தில் முக்கிய ரயில்களை மட்டும் இயக்கிவிட்டு, எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம் வசூலித்த நிலையில், தற்போதும் அனைத்து ரயில்களையும் இயக்கிவிட்டு, அதே கட்டணங்கள் வசூலிப்பதை கைவிட வேண்டும். சைக்கிள் நிறுத்தத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் நகரச் செயலாளா் எம்.ஏ. மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் பி.எஸ். மாசிலாமணி, நகரச் செயற்குழு உறுப்பினா்கள் வீ. தா்மதாஸ், பி. சின்னதம்பி, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT