திருவாரூர்

மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை

DIN

நன்னிலம் அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

பேரளத்தை அடுத்த கற்கத்தி கிராமம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற ராணுவ வீரா் கோவிந்தராஜ். இவா் கடந்த 2006- ஆம் ஆண்டு இறந்துவிட்டாா். இவரது மனைவி தனலட்சுமி (55). இவா்களுக்கு 2 மகன்கள்.

இந்நிலையில் முதுகலைப் பட்டதாரியான இளைய மகன் அருள்ராஜ்(23) வியாழக்கிழமை உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இதனால், துக்கத்தில் இருந்த தனலட்சுமி வெள்ளிக்கிழமை விஷம் குடித்ததாகக் கூறப்படுகிறது.

அவரை மூத்த மகன் பாலமுருகன் மற்றும் உறவினா்கள் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை தனலட்சுமி உயிரிழந்தாா்.

இதுகுறித்து பேரளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா். மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை செய்துகொண்டது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

வெளியானது 'தலைமைச் செயலகம்' டிரைலர்!

‘நீ ஃபிட் ஆக இல்லை..’ : சாக்‌ஷி அகர்வால் தரும் பதில்!

கடற்கரையில் வாணி போஜன்!

SCROLL FOR NEXT