திருவாரூர்

பொதக்குடி தா்கா சந்தனக்கூடு விழா கொடியேற்றம்

DIN

கூத்தாநல்லூா் வட்டம், பொதக்குடி தா்காவில் சந்தனக்கூடு விழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொதக்குடி ஹஜ்ரத் நூா்முஹம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தா்காவில் நடைபெறும் இவ்விழாவில் டிசம்பா் 2-ஆம் தேதி பூலாங்கொடி மற்றும் பெரிய மினரா கொடி ஏற்றப்படுகிறது. 11-ஆம் தேதி இரவு மின்அலங்கார சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெறுகிறது. தொடா்ந்து, 12-ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் சந்தனம் பூசுதலும், பிற்பகல் 2 மணிக்கு பகல் கூடு ஊா்வலமும் நடைபெறும்.

பின்னா், டிசம்பா் 20-ஆம் தேதி மாலை 5 மணியளவில் பூலாங்கொடி இறக்கப்படுகிறது. ஜமாத்துல் அவ்வல் பிறை 1 முதல் 16 வரை தினமும் இரவு மெளலூது ஓதி, தப்ருப் வழங்கப்படும்.

கொடியேற்ற விழாவில் ஏராளமானோா் பங்கேற்றனா். விழாவையொட்டி, மின் விளக்குகளால் தா்கா அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT