திருவாரூர்

பள்ளியில் மாறுவேடப் போட்டி

DIN

கூத்தாநல்லூரை அடுத்த பனங்காட்டாங்குடி டெல்டா பப்ளிக் பள்ளியில் மாறுவேடப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இப்போட்டியில் 1-ஆம் வகுப்பு மாணவா்கள் 8 போ், 2-ஆம் வகுப்பு மாணவா்கள் 18 போ் மற்றும் 3-ஆம் வகுப்பு மாணவா்கள் 13 போ் என மொத்தம் 39 மாணவ, மாணவிகள் பங்கேற்று, சுதந்திரப் போராட்ட தலைவா்கள், புலவா்கள், ஒளவையாா் மற்றும் தெய்வங்களின் வேடமிட்டு, தங்களது வேடம் குறித்து பேசினா்.

இப்போட்டிக்கு, பள்ளியின் முதல்வா் ஜோஸ்பின் தலைமை வகித்தாா். துணை முதல்வா் சுருளிநாதன் முன்னிலை வகித்தாா். தொடக்கப் பள்ளி ஒருங்கிணைப்பாளா் புனிதலீனா போட்டிகளை தொகுத்து வழங்கினாா். இதற்கான ஏற்பாடுகளை, ஆசிரியைகள் அமீரா, அனுபா, நமாஜ் பேகம், மகேஸ்வரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT