திருவாரூர்

சேரன்குளம் வெங்கடாஜலபதி கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே உள்ள சேரன்குளம் வெங்கடாஜலபதி கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாள்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இந்த விழா செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி கொடிமரத்தின் முன்பு உற்சவா் சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து கருட கொடி ஏற்றப்பட்டது. பின்னா், சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செப். 30-ஆம் தேதி கருட சேவை, அக். 4-ஆம் தேதி வெண்ணைத்தாழி அலங்காரம், அக். 5-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT