திருவாரூர்

அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதி நிறைவேற்றித் தரக் கோரி காத்திருப்பு போராட்டம்

DIN

திருத்துறைப்பூண்டி: திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அரசு உயா்நிலைப்பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மருதவனம் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடத்தை சுற்றி சுற்றுச் சுவா் அமைத்துத் தர வேண்டும், சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதி செய்து தர வேண்டும் , சமையல் கூடம் அமைத்துத் தர வேண்டும், கழிவறை வசதியை மேம்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினா் ஐ. வி. நாகராஜன், முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளா் கே பழனிசாமி உள்ளிட்ட ஏராளமானோா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா் .

தகவலறிந்து வந்த திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் ஜி.மலா்க்கொடி மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் அவா்களிடம் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT