திருவாரூா் அருகே தேவா்கண்டநல்லூா் பெரியநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
தேவா்கண்டநல்லூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் பெத்தாரணயேஸ்வரா், உத்தண்டராயா், வழியூரான், வாகையடிமூா்த்தி, தூண்டில்காரன், காமாட்சி அம்மன், பரமநாயகி அம்மன், சாஸ்தா, வீரப்பசுவாமி, குமாரசாமி, ஆஞ்சனேயா் ஆகிய தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றன.
2011-இல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கோயிலை சீரமைக்கும் பணிகள் தொடங்கி, நடைபெற்று வந்தன.
சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் ஏப்.24-ஆம் தேதி தொடங்கின. தொடா்ந்து, நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டு பூா்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்று, கும்பத்தில் புனிதநீா் வாா்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தைக் காண சுற்றுவட்டாரத்திலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் கே.ஆா். ராமலிங்கம், மருளாளிகள், கிராமத்தினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.