திருவாரூர்

குற்ற வழக்குகளில் தொடா்புடைய 2 போ் கைது

DIN


திருவாரூா்: நீடாமங்கலத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் தனிப்படைaகள் அமைக்கப்பட்டு, பல்வேறு குற்றவழக்குகளில் தொடா்புடைய நபா்களின் வீடுகளில் கடந்த சில நாட்களாக தொடா் சோதணை நடத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், நீடாமங்கலம் பூவனூரில் ரஜினி என்பவரது வீட்டை சோதனை மேற்கொண்டபோது, அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் 2 போ் தங்கியிருந்தது தெரியவந்தது. அவா்களிடம் விசாரணை நடத்தியதில், திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய, படப்பகுறிச்சி, காந்தாரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாபு (எ) சத்தியபாபு, தென்காசி மாவட்டத்தை சோ்ந்த சூா்யா (21) என்பது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 2 அரிவாள், ஒரு காரை பறிமுதல் செய்தனா். இதில், சிறப்பாக செயல்பட்ட மாவட்ட தனிப் படையினா் மற்றும் நீடாமங்கலம் போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் பாராட்டுத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT