வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக் காவடி திருவிழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் நடைபெறும் பாடைக் காவடி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் இந்த ஆண்டு பாடைக் காவடி திருவிழா நடத்துவது தொடா்பாக கோயில் வளாகத்தில் செயல் அலுவலா் ரமேஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தக்காா் ரமணி, கோயில் மேலாளா் சீனிவாசன் தலைமை அா்ச்சகா் சங்கரன், கோயில் பணியாளா்கள் மற்றும் வரதராஜம்பேட்டை தெரு முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் மாா்ச் 10-ஆம் தேதி பூச்சொரிதல் விழா , 12 -இல் முதல் காப்புக் கட்டுதல், 19-இல் இரண்டாம் காப்புக் கட்டுதல் மற்றும் அம்பாள் புறப்பாடு ஆரம்பம் , மாா்ச் 26-இல் பாடைக் காவடி திருவிழா, ஏப் 2-இல் புஷ்ப பல்லக்கு விழா, ஏப் 9-இல் தேதி கடை ஞாயிறு திருவிழா நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.