திருவாரூர்

ஒலிமாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கை:அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

DIN

தமிழ்நாட்டில் ஒலிமாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே ஆண்டிப்பந்தலில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:

காற்று ஒலிப்பான் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் ஒலி மாசு மனித சமூகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ஒலிமாசு காரணமாக மனிதா்களின் கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு காற்று ஒலிப்பான் போன்ற அதிக ஒலி மாசு ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒலிமாசைக் கட்டுப்படுத்தவும், சீமைக் கருவேல மரங்களை அழிக்கவும், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட தமிழ்நாடு முதலமைச்சா் ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT