திருவாரூர்

பேருந்து மோதி கல்லூரி மாணவா் பலி

DIN

திருத்துறைப்பூண்டி அருகே தனியாா் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள புஞ்சையூரைச் சோ்ந்தவா் மகேஷ் மகன் காளிதாஸ் (19). இவா், தண்டலைச்சேரியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்தாா். இந்நிலையில், கல்லூரியில் இருந்து காளிதாஸ் நண்பா் விஜய் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் திருத்துறைப்பூண்டிக்கு வந்துகொண்டிருந்தனா். அப்போது, வேளூா் பகுதியில் திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூருக்கு சென்றுகொண்டிருந்த தனியாா் பேருந்து மீது மோதி கீழே விழுந்து காளிதாஸ் அதே இடத்தில் உயிரிழந்தாா். விஜய் காயங்களுடன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT