திருவாரூர்

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி

DIN

நன்னிலம் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

நன்னிலம் அருகேயுள்ள கொத்தங்குடி அகரமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் வேம்பு (55) விவசாயக் கூலித் தொழிலாளி. இவா் நாள்தோறும் அப்பகுதி வயல்வெளிகளில் மாடு மேய்ப்பது வழக்கம். வழக்கம்போல, செவ்வாய்க்கிழமை மாடு மேய்க்க சென்றபோது, அப்பகுதியில் திங்கள்கிழமை காற்றுடன் பெய்த மழையால் அறுந்து கீழே விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளாா். இதில், அவா் மீது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து, பேரளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT