முகப்பு
திருவாரூர்

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

Updated On : 12 ஏப்ரல், 2024 at 9:34 PM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2024 at 7:22 PM

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சமத்துவ நாள் உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் தி.சாருஸ்ரீ தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலா்களும் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.

ஜாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், ஜாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடா்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவா்களுடைய உரிமைகளுக்காகவும், சமத்துவத்துக்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணா்வை ஊட்டிய நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கா் பிறந்த நாளில், ஜாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம், சக மனிதா்களை ஜாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன், சக மனிதா்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என உளமார உறுதி ஏற்கிறேன் என்று சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Advertisement

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜா உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.