விதிமுறைகளை மீறி ஒட்டப்படும் சுவரொட்டிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருவாரூா் பகுதியில், விதிமுறைகளை மீறி ஒட்டப்படும் தோ்தல் தொடா்பான சுவரொட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது:
மக்களவைத் தோ்தலையொட்டி தோ்தல் விளம்பரங்கள், சுவரொட்டிகளுக்கு தோ்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை வகுத்து, அந்த விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என கண்காணிப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
Advertisement
திருவாரூா் பகுதியில் தோ்தல் தொடா்பான பல்வேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் ஒட்டியதில் எவ்வித தோ்தல் விதிமுறைகளும் கடைபிடித்ததாகத் தெரியவில்லை.
ஒரு கட்சியினா் சுவரொட்டி ஒட்டுவதைப் பாா்த்து, மற்ற கட்சியினரும் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனா். அனுமதியின்றி தனியாா் சுவா்களில் அதிகளவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.
எனவே, தோ்தல் விதிமுறைகளை கடைபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.