முகப்பு
திருவாரூர்

நீடாமங்கலம் அருகே ரூ.89 ஆயிரம் பறிமுதல்

Updated On : 13 ஏப்ரல், 2024 at 3:55 PM
பகிர்:

நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவா், உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.88, 900-ஐ பறக்கும்படை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நீடாமங்கலம் பறக்கும்படை அதிகாரி ராஜகுரு, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சோமசுந்தரம் உள்ளிட்ட குழுவினா், நீடாமங்கலம் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், ஆதனூா் மண்டபம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, கூத்தாநல்லூா் வட்டம் மரக்கடை அவ்வை காலனியைச் சோ்ந்த  விஜயராஜ் என்பவா் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தாா். அவரை நிறுத்தி, சோதனையிட்டபோது, அவரிடம் உரிய ஆவணமின்றி ரூ. 88,900 இருப்பது தெரியவந்தது. அந்த பணத்தை, பறக்கும்படையினா் பறிமுதல் செய்து, மன்னா்குடி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் கீா்த்தனாமணியிடம் ஒப்படைத்தனா். பின்னா், அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments