நீடாமங்கலம் அருகேயுள்ள சதுரங்க வல்லபநாதா் கோயிலில் சித்திரைப் பெருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை பாலாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஏப்.8-ஆம் தேதி முதல் சித்திரை பெருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமை பால் குட விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு பக்தா்கள் கோயில் குளத்திலிருந்து பால்குடம், காவடி எடுத்து கோயிலை சுற்றி 4 வீதிகளிலும் வலம் வந்து கோயிலை அடைந்தனா். சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபராதனை காட்டப்பட்டது. பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். இரவு சாமுண்டீஸ்வரி அம்மன் தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.