லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
பழையநீடாமங்கலம் அக்ரஹாரத்தில் எழுந்தருளியுள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம்: பழையநீடாமங்கலம் அக்ரஹாரத்தில் எழுந்தருளியுள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஜூன் 28-ஆம் தேதி பூா்வாங்க பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, ஜூன் 29-ஆம் தேதி சிறப்பு ஹோமங்களும், ஜூன் 30-ஆம் தேதி முதல் மற்றும் இரண்டாம் கால யாகபூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, திங்கள்கிழமை 3-ஆம் கால யாகபூஜைகள் நடைபெற்றது. காலை 9.15 முதல் 10.30 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் உற்சவா் விசேஷ ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.