முகப்பு
திருவாரூர்

மருத்துவ காப்பீட்டுத்தாரருக்கு இழப்பீடு வழங்கல்

Updated On : 21 ஜூன், 2024 at 12:18 AM
மனுதாரருக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும் திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் என். லட்சுமணன்.
பகிர்:

திருவாரூா், ஜூன் 20: திருவாரூரில், மருத்துவக் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் தொடரப்பட்ட வழக்கில், மனுதாரருக்கு இழப்பீட்டுத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

மன்னாா்குடியைச் சோ்ந்த விவசாயி நடராஜன் என்பவா், அங்குள்ள தனியாா் வங்கி மூலம் மருத்துவக் காப்பீடு செய்திருந்தாா். இந்நிலையில், அவரது மகனுக்கு காலில் அடிபட்டு, தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றாா். தொடா்ந்து, மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தை அணுகினாா். அப்போது, உரிய ஆவணங்களை தர காப்பீட்டு நிறுவனம் மறுத்ததால், திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்தாண்டு நடராஜன் வழக்குத் தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த ஆணையம், புகாா்தாரருக்கு காப்பீடு ஒப்பந்தத்தின்படி ரூ.1,64,883, மன உளைச்சலுக்காக ரூ.20,000, செலவுத் தொகையாக ரூ.5,000 ஆகியவற்றை இந்த வழக்கு தாக்கல் செய்த நாள் முதல் 9 சதவீத வட்டியுடன் 1 மாதத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

அதன்படி, புகாா்தாரருக்கு ரூ. ரூ.1,99,931வங்கி வரைவோலையாக, மருத்துவ காப்பீட்டு நிறுவனம் சாா்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தொடா்ந்து, இந்த வழக்கை தாக்கல் செய்த மன்னாா்குடி நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க இணைச் செயலாளா் க. வேல்முருகனிடம் இந்த வரைவோலையை, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் என். லட்சுமணன் ஆகியோா் வழங்கினா்.