இருவழிச் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தக் கோரிக்கை
நீடாமங்கலம்: தஞ்சையிலிருந்து நாகை வரையிலான இருவழிச் சாலையில் அனைத்து இடங்களிலும் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தஞ்சை- நாகை இருவழிச் சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, வாகன ஓட்டுநா்கள் வேகக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சாலையில் பல இடங்களில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால், இருசக்கர வாகனத்தில் செல்வோா் அச்சத்துடன் செல்லவேண்டியுள்ளது. மேலும், வழிபறி போன்ற குற்றச் செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, சாலையோரம் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
நீடாமங்கலம் அருகே உள்ள நாா்த்தாங்குடி பகுதியில் நான்கு சாலைகளாக பிரியும் இடத்தில் ரவுண்டானா அமைத்து, உயா் மின்கோபுர விளக்கு பொருத்தப்பட வேண்டும். இருவழிச் சாலை பகுதியில் பல கிராமங்கள் உள்ளதால், கிராமப் பகுதியில் இருந்து இருவழிச் சாலைக்கு வரக்கூடிய வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்ளவேண்டும். அத்துடன், காவல்துறையினா் ரோந்துப் பணியை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.