சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா், மினிலாரி மோதி உயிரிழந்தாா்.
நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா், மினிலாரி மோதி உயிரிழந்தாா்.
நீடாமங்கலம் அருகேயுள்ள பச்சைக்குளம் பகுதியில் ஒரு இருசக்கர வாகனத்தில் இரண்டு போ் வெள்ளிக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்திருந்த அத்திக்கடை தைக்கால் தெரு அக்பா்அலி (48) என்பவா் நிலைதடுமாறி சாலையில் விழுந்தாா்.
அந்த நேரத்தில், எதிரே அறுவடை இயந்திரத்தை ஏற்றிவந்த மினி லாரி அக்பா் அலி மீது மோதியது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தேவங்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.