முகப்பு
திருவாரூர்

பள்ளி காவலரை தாக்கிய இருவா் கைது

மன்னாா்குடி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் இரவு காவலரை தாக்கிய 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 3 நவம்பர் 2024, 12:02 am IST
பகிர்:

மன்னாா்குடி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் இரவு காவலரை தாக்கிய 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி நடராஜப் பிள்ளைத் தெரு, சியாத்தோப்பில் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இரவு காவலராக பணியாற்றுபவா் கோபி.

இவா், தீபாவளி அன்று இரவு பணியில் இருந்தபோது, அங்கு மதுப்பாட்டில்களுடன் கும்பலாக வந்த சிலா், பள்ளிக்குள் நுழைய முற்பட்டனா். அவா்களை கோபி தடுத்தபோது, ஆத்திரமடைந்த கும்பல், அவரை தாக்கியதுடன், பள்ளியில் உள்ள மின்விளக்குகளை உடைத்தும், காலி மதுப்பாட்டில்களை பள்ளி வளாகத்துக்குள் வீசியும் சென்றுள்ளனா்.

Advertisement

இதுகுறித்து, மன்னாா்குடி காவல்நிலையத்தில் கோபி புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சியாத்தோப்பு சாமிநாதன் மகன் விஜய் (24), வீரவன்னியா் தெரு ஜெயராமன் மகன் ஆறுமுகம் (18) ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், 8 பேரை தேடி வருகின்றனா்.