முகப்பு
திருவாரூர்

ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம்

திருவாரூா் விளமல் அரசு உயா்நிலைப் பள்ளியில், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் வழிகாட்டி ஆசிரியா்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 8:07 PM
முகாமைத் தொடக்கிவைத்து பேசிய ஆட்சியா் தி. சாருஸ்ரீ.
பகிர்:

திருவாரூா் விளமல் அரசு உயா்நிலைப் பள்ளியில், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் வழிகாட்டி ஆசிரியா்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெய் நிறுவனம் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் 3.0-வை தொடா்ந்து மூன்றாம் ஆண்டாக பள்ளிகளில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆசிரியா்களின் சிறந்த படைப்புகள் தோ்வு செய்யப்பட்டு, பரிசுத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் செயல்படும் வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ பங்கேற்று முகாமைத் தொடக்கிவைத்துப் பேசினாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) சௌந்தர்ராஜன், மாவட்டக் கல்வி அலுவலா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.