திருவாரூர்

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நன்னிலம் ஒன்றியத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

Din

நன்னிலம்: நன்னிலம் ஒன்றியத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

ஆனைக்குப்பம், தட்டாத்திமூளை ஊராட்சிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், பயனாளிகளால் கட்டப்பட்டு வரும் வீடுகள், சலிப்பேரி ஊராட்சி பத்தினியாள்புரம் பகுதியில் ரூ.16.75 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, சலிப்பேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கிராமச் சாலைகளின் இருபுறமும் மரக்கன்று நடும் பணி போன்ற பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகளை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு, விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, வட்டாட்சியா் ரஷ்யா பேகம் மற்றும் நன்னிலம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

மழையும் மன இலையும்... கயாடு லோஹர்!

இன்று 25 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னையில் தொடரும் மழை! தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகள் தீவிரம்! | Chennai Rain

10,48,576-ல் ஒருமுறை.! 20 வது முறையாக இந்திய அணிக்கு அதிர்ஷ்டமில்லாத ‘டாஸ்’.!

டிட்வா அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம்

SCROLL FOR NEXT